மிடில் ரோடு, குவீன் ஸ்திரீட் சந்திப்பில் நடந்த விபத்தில் மூன்று வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின.
இரண்டு வெள்ளை நிற கார் களும் ஒரு டாக்சியும் சம்பந்தப் பட்டிருந்த இவ்விபத்தில் மூவர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 35 வயது டாக்சி ஓட்டுநரும் அவரின் 29 வயது பயணியும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் ஒரு காரின் 38 வயது ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.
விபத்து குறித்து சனிக்கிழமை பின்னிரவு 1.49 மணிக்குத் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இன்னொரு வெள்ளை நிற காரின் ஓட்டுநர் சம்பவ இடத் திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக 'வான்பாவ்', 'ஷின் மின்' சீன நாளிதழ்கள் தெரிவித்தன.
ஒரு வெள்ளை நிற காரின் முன்பகுதியும் இடப்பக்கமும் பெரும் சேதம் அடைந்திருந்ததைக் காட்டும் படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. விபத்தின் தாக்கத்தால் அந்த காரின் காற் றுப்பைகளும் விரிவடைந்து காணப்பட்டன.
மற்றொரு வெள்ளை காரின் முன்பகுதியும் சேதமடைந்திருந் ததுடன் சாலை எங்கும் சிதைவு கள் கிடக்கக் காணப்பட்ன.
விபத்து குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து
11 Feb 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Feb 2019 08:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!