திகில் சம்பவங்களை சித்திரிக்கும் சத்ரு

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித் துள்ள 'சத்ரு' படத்தின் கதைக் கரு திகில் சம்பவங்களைக் கொண்டு சித்திரிக்கப்பட்டுள் ளது. இந்தச் சம்பவங்கள் 24 மணிநேரத்தில் நடப்பதாக இருக் கும் என்றும் கூறப்படுகிறது.
'பரியேறும் பெருமாள்' கதி ரின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'சத்ரு.' இப்படத்தில் கதிரின் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார்.
'ராட்டினம்' படத்தில் கதா நாயகனாக வந்த லகுபரன் இப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் பொறுப்புகளை கவனிக் கும் நவீன் நஞ்சுண்டான் படம் பற்றி கூறுகையில், "இது ஒரு அதிரடி, திகில் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் ஐவரை துணிச்சல்மிக்க ஒரு போலிஸ் அதிகாரி எப்படி மடக்கிப்பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துகிறார் என்பதே 'சத்ரு' படத்தின் திரைக் கதை. படம் மார்ச் 1ஆம் தேதி திரைக்கு வரும். ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித் துள்ளனர். 'மரகத நாணயம்,' 'ராட்சசன்' படங்களைத் தயாரித்த டில்லிபாபு இந்தப் படத்தை வெளி யிடுகிறார்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!