ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், குல்காம் பகுதியில் உள்ள ஜவஹர் சுரங்கத்தில் நேற்று முன்தினம் மாலை பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது, சுரங்கச் சாவடியில் பணியிலிருந்த 10 போலிசார் பனிச்சரிவில் சிக்கிப் புதைந்தனர். அவர்களில் மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மற்றவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மீட்பு பணியாளர்களுக்கு உள்ளூர்வாசிகளும் உதவி வருகின்றனர்.
படம்: இபிஏ