விமானக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று அங்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பார்வையாளர்களுக்குச் சொந்தமான 200க்கும் மேற்பட்ட கார்களும் மோட்டார் சைக்கிள்களும் தீக்கிரையாகின. வறண்ட வானிலையும் காற்று வேகமாக வீசியதுமே தீ பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது. அணைக்கப் படாமல் வீசப்பட்ட சிகரெட் துண்டால் இந்தத் தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால் சிறிது நேரம் விமானக் கண்காட்சி தடைபட்டது. இச்சம்பவத்தில் பொதுமக்களில் எவரும் பாதிக்கப்படவில்லை. கடந்த புதன்கிழமை தொடங்கிய விமானக் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. படம்: இந்திய ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!