சுதாஸகி ராமன்
இருட்டான அறையில் கைகளை அலங்கரிக்கும் அழகிய மயில், தாமரை வடிவங்களைக் கொண்ட மருதாணி வடிவமைப்பு பல வண் ணங்களில் மிளிர்கிறது. இந்த புதிய வகை ஒளிரும் மருதாணியை (glow in the dark) 'வான ஹென்னா (Wanna Henna)' இவ்வாண்டு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவ்வாண்டு தீபாவளிக்கு இந்தப் புதிய ஒளிரும் மருதாணி யுடன் கருநீல நிற ஜாகுவா மருதாணியையும் பயன்படுத்தி பெண்களின் கைகளை 'வான ஹென்னா'வின் நிறுவனர் சுவேதா சரவணகுமார், 22, அலங்கரித்து வருகிறார்.
வழக்கமாகப் பயன்படுத்தும் இயற்கையான மருதாணியைப் போல் இல்லாமல் ஒளிரும் மருதாணியும் வெண்ணிற மரு தாணியும் ஒரு சில நாட்களுக்கு மேல் தோலில் நீடிப்பதில்லை. இவ்விரண்டு வகைகளும் தோலில் கறைகளை ஏற்படுத்தாத தால் அவை பல நாட்கள் நீடிப் பதில்லை என்றும் நீரால் அவை அழியாவிட்டாலும் அதன்மேல் தேய்த்தால் அவற்றை எளிதாக கைகளிலிருந்து அழித்துவிடலாம் என்றும் சுவேதா குறிப்பிட்டார். எனினும், இந்தப் புதுமையான மருதாணிக்கு இளையர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் கணக்கியல், நிதித்துறையில் பட்டப்படிப்பைப் பயின்றுவரும் சுவேதா பகிர்ந்து கொண்டார்.