சிலப்பதிகார கண்ணகி யின் கதையைத் தெருக்கூத்து வடிவில் முன்வைக்கிறது பாஸ்கர் கலைப் பள்ளி. நடனமாகவும் நாடகமாகவும் மேடையேறியுள்ள இந்தக் காப்பியம், தெருகூத்து வடிவில் சிங்கப்பூரில் படைக்கப்படுவது இதுவே முதன்முறை. சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான 'நாட்டுப்புற கலை வளர்க்கும் கதை மரபு' அங்கத்தில் பாஸ்கர் கலைப் பள்ளியின் 'சிலம்புச் செல்வி' தெருக்கூத்தும் இடம்பெறுகிறது. பாண்டிய மன்னனுக்கும் கண்ணகிக்கும் இடையே நடைபெறும் உச்சக்கட்ட விவாதக் காட்சி 30 நிமிடத் தெருக்கூத்தாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அங்கத்தில் பாட்டு, நடனம், நாடகம் என சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் என்றார் பாஸ்கர் கலைப் பள்ளியின் கலை நிர்வாகியும் மூத்த நடனக் கலைஞ ருமான திருமதி சாந்தா பாஸ்கர். தெருக்கூத்துக்கான புரிசை பள்ளியைத் தமிழகத் தில் நடத்திவரும் புரிசை கண்ணப்ப சம்பந்தனின் எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'சிலம்புச் செல்வி'யில் அனைத்துக் கதாபாத்திரங்களையும் பெண்கள் ஏற்று நடிப்பது இந்தப் படைப்பினது சிறப்பு அம்சம். நவம்பர் 4ஆம் தேதி நடைபெறும் 'நாட்டுப்புற கலை வளர்க்கும் கதை மரபு' நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக தெருக்கூத்து இடம்பெறுகிறது.