எதிர்கால பொருளியலில் சுய தொழில் செய்வோர் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்குவார் கள் என்பது பற்றி ஆய்வு செய்வ தற்கு முத்தரப்புப் பணிக்குழு ஒன்று இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. முக்கிய பிரச்சி னைகள் என்று எவற்றை குறிப்பிடு கிறார்கள் என்பது பற்றி பொதுமக் களிடம் கருத்துகளைத் திரட்டு கிறது அந்தப் பணிக்குழு.
மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப் பூர் தேசிய முதலாளிகள் சம்மேள னம் ஆகிய அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தப் பணிக்குழு, சுயதொழில் செய்வோருடன் நடை பெற்ற பல கலந்துரையாடல்களின் மூலம் பற்பல அக்கறைக்குரிய தக வல்கள் பெறப்பட்டதாகக் கூறியது. தாமதமாக ஊதியம் பெறுவது, சில வேளைகளில் ஊதியமே கிடைக்காதது அல்லது முழுமை யாகப் பெறாதது, வேலைவாய்ப்பு அனுகூலங்கள் பெறமுடியாதது, போதுமான வேலை கிடைக்காத சாத்தியம், நிலையற்ற வருமானம் ஆகியவை சுயதொழில் செய்வோர் சுட்டிக்காட்டிய கவலைகளில் சில. பொதுமக்கள் தங்கள் கருத்து களை mom_consultations@ mom.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 22ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பலாம்.