பத்து நாள் மழை: 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியதாகத் தகவல்

சென்னை: கடந்த பத்து தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 1,379 ஏரிகளும் குளங்களும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 14,098 ஏரிகள், குளங்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றில் தற்போது 1379 ஏரி, குளங்கள் நிரம்பி விட்டன. சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி, கொளத்தூர் ஆகிய 2 ஏரிகளும் நிரம்பி விட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 961 ஏரிகளில் 239ம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 593 ஏரிகளில் 217ம் நிரம்பியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 252 ஏரிகள் நிரம்பியுள்ளன. ஈரோடு, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு ஏரி கூட நிரம்பவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!