‘பருவமழை காரணமாக மலேசியாவில் இந்த ஆண்டு தேர்தல் சாத்தியமில்லை’

ஹனோய்: பருவமழை காரண மாக மலேசியாவின் பல மாநிலங் கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால் அது தேர்தல் முடிவைப் பாதிக்கக் கூடும் என்பதால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படுவதற்கு சாத் தியம் இல்லை என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் தேர்தல் அடுத்த ஆண்டு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. வியட்னாமில் தொடங்கவுள்ள ஆசிய பசிபிக் பொருளியல் மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள மலேசிய வர்த்தக அமைச்சர் முஸ்தபா முகம்மது ஒரு பேட்டியில், பருவமழை காலத்தில் தேர்தல் நடத்தினால் பாதிப்புகள் இருக்கும் என்று கூறி னார்.

மோசமான பருவமழை காலம் வழக்கமாக நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும். மலேசியாவில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், தேர்தலை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே நடத் தக்கூடும் என்ற யூகம் நிலவி வருகிறது. எதிர்வரும் தேர்தலில் திரு நஜிப்பின் தேசிய முன்னணி கூட்டணி பெரும்பான்மை இடங் களைக் கைப்பற்றி வெற்றி பெறும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க் கின்றனர். இருப்பினும் மலேசியா வில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகள் காரணமாக ஆளும் கட்சிக்கு ஆதரவு குறைய வாய்ப் புள்ளது என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!