சென்னை: பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் பல் வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக திமுக மாநிலங்க ளவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மக்களுக்கு எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதற்கு எதிராக குரல் கொடுக் கும் இயக்கம் திமுக என்றார். பழைய ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்ற முடியாமல் பொது மக்கள் அவதிப்பட்ட நேரத்தில் தமிழக முதன்மைச் செயலருக்கும் சேகர் ரெட்டிக் கும் மட்டும் கோடிக்கணக்கில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் கிடைத்தது எப்படி? என கனிமொழி கேள்வி எழுப் பினார்.
"முன்பு தமிழகத்தில் இரண்டு முறை வருமான வரித் துறையினர் சோதனை நடவ டிக்கை மேற்கொண்டனர். சேகர் ரெட்டி வீட்டில் இருந்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டன. "முதன்மைச் செயலர் வீட்டில் இருந்து புதிய நோட்டுக்கள் எடுக்கப்பட்டன. "மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் அவதிப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு புதிய நோட்டுகள் கிடைத்தது எப்படி?
ஆதிக்கம் படைத்தவர்கள் சில இடைத்தரகர்கள் மூலமாக தங்களிடம் இருந்த பணத்தை மாற்றி விட்டனர்," என்றார் கனி மொழி. சிறுகச் சிறுக சேமித்த பணத்தை மாற்ற முடியாமல் சாதாரண மக்கள் கடும் அவதிப் பட்டதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் நடவடிக்கையால் சிறு தொழில்கள் முற்றிலுமாக முடங்கியது என்றும், ஏராளமான திருமணங்கள் நின்று போனது என்றும் சாடினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை யால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப் பதாகவும் தொழில்கள் நசிந்தன என்றும் சுட்டிக்காட்டிய அவர், பலர் அதிர்ச்சியால் உயிரிழந்த தாக வேதனை தெரிவித்தார். இதற்கிடையே, பண மதிப் பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளச்சல் பகுதியில் காங்கிரசார் கருப்பு சேலை அணிந்து, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக காங்கிரசார் தலை யில் முக்காடு போட்டு, நெற்றி யில் நாமமிட்டிருந்தனர்.