தம்பிதுரை: கூட்டணிக்காக சரணாகதி அடையவில்லை

சென்னை: அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக சரணாகதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்க இயலாது என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், கூட்டணிக்காக கொள்கை ரீதியில் பாஜகவுடன் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார்.
"தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே பாஜக வுடன் கூட்டணி அமைக் கப்பட்டுள்ளது. அதற்காக அதிமுக என்றுமே கொள்கை களை விட்டுக்கொடுக்காது.
"குடும்ப அரசியலில் ஈடுபட்டு கட்சி நடத்துபவர் கள் வெற்றி பெறுவது நாட் டிற்கு நல்லதல்ல. அதனால் அதிமுக உருவாக்கப்பட்டது," என்றார் தம்பிதுரை.
தமிழக அரசு வஞ்சிக்கப் பட்டது உண்மைதான் என்று குறிப்பிட்ட அவர், மத்தியில் மீண்டும் மோடி ஆட்சிதான் வரப்போகிறது என்றார்.
அண்மைக் காலமாக இவர் மத்திய பாரதிய ஜனதா அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமையுமா? எனும் சந்தேகம் ஏற்பட்டது. எனினும் அதிமுக தலைமை மேற்கொண்ட முயற்சியால் கூட்டணி அமைந்துள்ளது. கட்சி மேலி டம் தம்பிதுரையிடம் பேசி அவரை சாமாதானப்படுத்தி யதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!