சென்னை: மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தமிழகத்தில் உள்ள அதிமுகவைக் கசக்கிப் பிழிந்து கூட்டணியை அமைத்தி ருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரி வித்துள்ளார்.
நேற்று முன்தினம் சென்னை யில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடை பெற்றது. இதையடுத்து செய்தி யாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி, மீன்வளத்துறை அமைச் சர் ஜெயக்குமார் குறிப்பிட்டது போல் திமுக கூட்டணியில் சந்தர்ப்பவாதம் ஏதும் இல்லை என்றார்.
அதிமுகவுக்கு எதிராக குட்கா ஊழல் வழக்கை தொடுத்தவர் களுடன் கூட்டணி வைத்தது தான் சந்தர்ப்பவாதம் என்றும் அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.
"எங்கள் கூட்டணியில் என்ன சந்தர்ப்பவாதம் இருக்கிறது? நாங்கள் திமுகவுக்கு எதிராக 25 ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தோமா?
"ஆனால் நீதிமன்றத்தில் பல வழக்குகளைத் தொடுத்ததுடன் இப்போது கூட்டணி சேர்ந்துள்ள னரே அதற்குப் பேர்தான் சந்தர்ப்ப வாதம்," என்று சாடினார் கே.எஸ். அழகிரி.
தலைமைச் செயலர் அறையில் அதிரடிச் சோதனை, அமைச்சர் கள் மீது குட்கா வழக்கு என் றெல்லாம் நடவடிக்கை எடுத்த பாஜகவுடன் தற்போது கூட்டணி அமைத்திருப்பது முற்றிலும் சந்தர்ப்பவாதம் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் ஜெயக்குமார் தினமும் நாளேடுகள் எல்லாம் படிப்பதில்லை போலிருக்கிறது என்றார்.
அதிமுகவைக் கசக்கிப் பிழிந்து பாஜக கூட்டணி அமைத்தது என்கிறது காங்கிரஸ்
24 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2019 08:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!