தமிழ்நாடு

சிதம்பரம்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைபணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்த குதிரை ராஜா உடல் சுகவீனத்தால் மரணமடைந்தது.
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் ஏப்ரல் 25 வரை நீட்டிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆனால் ஒரு சில தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் டோக்கன் வழங்கி ஓட்டுப்பதிவு அளிக்கப்பட்டதால் இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இதனால் அன்று இரவு நிலவரப்படி உத்தேச தகவல்கள் வெளியிடப்பட்டன.
சென்னை: ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15ஆம் தேதி முதல் ஜுன் 14ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15ஆம் தேதியன்று தொடங்கியது.