இளையர் முரசு

தன் தந்தை இவ்வாண்டு பிப்ரவரி மாதம் இறந்தபின், அவர் வடிவமைத்த சிங்கப்பூர் டீ சட்டைகளை விற்றுவருகிறார் 23 வயது நாச்சியப்பன் லெட்சுமணன்.
தமிழ் முரசு நாளிதழுக்கு முக்கிய மைல்கல்லாக அமைந்தது அதன் புதிய செயலி அறிமுகம். நாளிதழ் நேற்று தமிழ் சமூகத்தினரின் அடையாளமாக அதன் செயலியை அறிமுகப்படுத்தியது. மின்னிலக்கமயமாதலை நோக்கிச் செல்லும் இக்காலகட்டத்தில் இதன் மூலம் இளையர்கள் அதிகப் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செயலியில் அடங்கியுள்ள அம்சங்களைப் பற்றியும் செயலியைப் பயன்படுத்திய அனுபவங்களைப் பற்றியும் இளையர்கள் சிலரிடம் கேட்டு வந்தது இளையர் முரசு.
காலை வெயில் சுட்டெரித்த போதிலும் தமிழ் முரசு செயலியின் வெளியீட்டு விழாவைக் காண வந்தோரின் உற்சாகம் குறையவில்லை. தீபாவளிச் சந்தையின் கூடாரத்திற்கு மத்தியில் மலர்ச்சரங்கள், தொம்பைகள், வண்ணப் பைகள் என அலங்காரமயமான சூழலுக்கு நடுவே பார்வையாளர்கள் அமர்ந்து செயலியின் அறிமுக நிகழ்ச்சியைக் கண்டனர். 
நடனத்தை முதியோருக்குக் கற்றுக்கொடுத்து மகிழ்விக்கின்றனர் ‘டவுன் சிண்ட்ரோம்’ கொண்ட ‘டிஏடிசி’ நடனக் கூட்டணியினர்.
காதல் ஒருவரின் மனத்தில் விண்மீனைப்போல ஒளியூட்டும் சக்தி கொண்டது என்ற கருப்பொருளுடன் ஷபீர் சுல்தானின் புதிய பாடலொன்று உருவாக்கப்பட்டுள்ளது.