இளையர் முரசு

மாணவர்களிடத்தில் தமிழ்ப் பேச்சாற்றலை ஊக்குவிக்க தமிழ் இளையர் விழாவின் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் ‘அழகே! மொழியே!’ பேச்சுப் போட்டி சனிக்கிழமை செப்டம்பர் 9 அன்று தேசிய நூலகத்தில் நடைபெற்றது.
எதிர்காலத்தில் சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை எடுத்துக்கூறும் திரைப்படங்கள் வரவேண்டும் என்கிறார் இளையர் நிரஞ்சன் பென்னட்.
பிரதான விழா 2018இன் சிறந்த தகவல் நிகழ்ச்சிப் படைப்பாளர் இலக்கியா செல்வராஜி ‘தமிழே! அழகே!’ எனும் நான்கு மணி நேரப் பயிலரங்கை, சனிக்கிழமை (செப்டம்பர் 9) தேசிய நூலகத்தில் நடத்தினார்.
சிறு சிறு செயல்கள்கூட பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனும் கருத்தை சிறுவர்களிடத்தில் புகுத்துகிறது பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் ‘ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்’ (எஸ்எஸ்டிபி) இயக்கம்.
“இருளின் முடிவில் எப்பொழுதும் ஓர் ஒளி காத்திருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது. இதனை நினைவூட்டுவதும், வலியுறுத்திச் சொல்வதும்தான் என் இசையின் மூலக்கூறு,” என்கிறார் ‘சொல்லிசை’ கலைஞர் லினெத் ராஜேந்திரன்.