இளையர் முரசு

நகைச்சுவை கலந்த மர்ம நாடகத்தைக் காண வந்திருந்தோரை மீண்டும் மீண்டும் சிரிக்க வைத்தது ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி இந்திய கலாசார குழுவின் பத்தாவது நக்‌ஷத்திரா மேடை நாடகம், ‘மறுபடியுமா?’.
இயற்கைப் பிரியர்கள் காடுகளிலும் பூங்காக்களிலும் தங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவார்கள். 29 வயது ஃபாத்திமா ஹலீமா முகம்மது அன்சாரி முழுநேரப் பணியாக பெரும்பாலான நேரங்களில் அவ்விடங்களில் மரங்களைச் சோதித்துக்கொண்டிருப்பதை நாம் காணலாம்.
கடந்த ஆண்டின் லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மூவருள் ஒருவர் 28 வயது மருத்துவர் மா. பிரெமிக்கா. இந்த உபகாரச் சம்பளத்தின் மூலம் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதாரத் துறையில் ஓராண்டுகால முதுநிலைப் பட்டக்கல்வியை விருதுகள், சிறப்புகளுடன் நிறைவுசெய்து நாட்டுக்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினர் தங்களின் கல்வியின் மீது மட்டும் கவனம் செலுத்தாது பிறர் நலன் பேணும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்கள் இருவரின் சமூகப் பணிகளை அடையாளங்காணும் வகையில் அண்மையில் விருது பெற்றிருந்தனர்.
சிங்கப்பூர் அரசு நீதிமன்றங்கள் நாட்டில் வகிக்கும் பங்கு குறித்துப் புரிந்துகொள்ள 32 உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவர்கள் ‘நீதிமன்றத்தில் ஒரு நாள்’ என்னும் நடவடிக்கையில் கலந்துகொண்டனர்.