உல‌க‌ம்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைத்திருக்கலாம் என்று அவருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்புப் பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கையில் கூறப்படுவது உண்மை என்று மலேசியாவின் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்: இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராகக் கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.
சோல்: வடகொரியாமீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளியல் தடைகளைக் கண்காணிக்கப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய புதிய குழு ஒன்றை நியமிக்க அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளதாகப் புதன்கிழமை தகவல்கள் தெரிவித்தன.
துபாய்: மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக துபாய் அனைத்துலக விமான நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.