உல‌க‌ம்

வாஷிங்டன்: அமெரிக்கா அதன் துருப்பினரைப் பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று, ஜனவரி 29ஆம் தேதி, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கூறியுள்ளார்.
ரமல்லா, மேற்குக் கரை: ஜெனின் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒளிந்துகொண்டு, தாக்குதல் நடத்த திட்டமிட்டுக்கொண்டிருந்த ஹமாஸ் போராளிகளை தனது படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியுள்ளது.
புதுடெல்லி: சென்ற ஆண்டு அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்களில் பத்தில் ஒன்று இந்தியக் குடிமக்களிடமிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 60 விழுக்காடு அதிகம்.
கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுக்குக் கொலை மிரட்டல் விடுத்த லாரி ஓட்டுநருக்கு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் கொலம்பியா: அனைத்துலக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விழையும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநில அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.