உல‌க‌ம்

அம்மான்: ஜோர்தானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று அமெரிக்க வீரர்கள் மாண்டனர்.
கோலாலம்பூர்: தமது சொத்துகள் பற்றிய விவரங்களை வெளியிடத் தவறியதாக முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது ஜனவரி 29ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கெடா: தீயணைப்பானைக் கைகளில் ஏந்தியவாறு பல்பொருள் கடை ஒன்றுக்குள் புகுந்த இருவர், கொள்ளையடிக்க முயன்றதை அடுத்து அவ்விரு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
ஹாங்காங்: ஹாங்காங்கிலிருந்து கிளம்பி சில நிமிடங்களே ஆன கேத்தே பசிபிக் விமானம் ஒன்றில் ‘வழக்கத்திற்கு மாறான நாற்றம்’ இருந்ததை அடுத்து அது பினாங்குக்குச் செல்லாமல் மீண்டும் ஹாங்காங்கிலேயே தரையிறங்கியது.
பேங்காக்: வான்குடை இயங்காத காரணத்தால் 29 மாடி உயரத்திலிருந்து தாவிய பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் ஜனவரி 27ஆம் தேதியன்று உயிரிழந்தார்.