உல‌க‌ம்

ஜெருசலம்: மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் ஆறு பாலஸ்தீனர்களையும் குறைந்தது ஒரு துப்பாக்கி ஏந்திய ஆடவரையும் கொன்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஸா/ ஜெருசலம்: இஸ்ரேல்-ஹமாஸ் தற்காலிக சண்டை நிறுத்தத்தின்கீழ் ஹமாஸ் இரண்டாவது முறையாக விடுவித்த 13 இஸ்ரேலியர்களும் நான்கு தாய்லாந்து நாட்டவர்களும் நவம்பர் 26ஆம் இஸ்ரேல் வந்து சேர்ந்துள்ளனர்.
புத்ராஜெயா: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், முஸ்லிம் நாடாக இருந்தாலும் மற்றவர்களை பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரின் ரஷித் மின்ஹாஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் கிட்டத்தட்ட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீப்பிடித்த கட்டடத்திற்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஜகார்த்தா: இந்தோனீசிய மக்களுக்கு சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தியா, இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஐந்து நாள் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.