உல‌க‌ம்

மாஸ்கோ: கிரைமியாவில் உள்ள செவஸ்டோபோல் துறைமுகப் பகுதியில் உக்ரேன் வான்வழியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ர‌ஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
அபுஜா: இம்மாத தொடக்கத்தில் நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் துப்பாக்கிக்காரர்களால் கடத்தப்பட்டனர்.
வாஷிங்டன்: குழி விழுந்த கண்கள், காய்ந்த உதடுகள், வாயிலும் விரல் நகங்களிலும் மலம்.
கியவ்: உக்ரேனியத் தலைநகர் கியவ், அந்நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கும் லிவிவ் நகரம் ஆகியவற்றின் மீது ர‌ஷ்யா கடுமையான ஆகாயப் படைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருபது ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் ஏராளமானவர்கள் தானியங்கி ஆயுதங்களால் சுடப்பட்டதையடுத்து, ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 24) அந்நாடு துக்கம் காத்தது. தேசியக் கொடிகள் அரை கம்பத்துக்கு இறக்கப்பட்டன.

தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டனர். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக சூளுரைத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.

“தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மார்ச் 23ஆம் தேதி, மக்களுக்கு ஆற்றிய உரையில் திரு புட்டின் வருத்தம் தெரிவித்தார்.