சிங்க‌ப்பூர்

தொழிலாளர் தினப் பொது விடுமுறைக்கு முந்திய நாள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் வழக்கத்திற்கு மாறாக சற்று பின்னேரத்தில் ரயில் அல்லது பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியியல் வல்லுநரான பேராசிரியர் கெர்ட்ஜான் மெடெமா, 2024ஆம் ஆண்டுக்கான லீ குவான் யூ தண்ணீர்ப் பரிசை வென்றுள்ளதாக ஏப்ரல் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் சார்பில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு சுவா சூ காங்கிலிருக்கும் கியட்ஹாங் சமூக மன்றத்தின் 5ஆம் தளத்தில் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆரக்கிள்’, சிங்கப்பூரில் மாணவர்கள், வல்லுநர்கள் என 10,000 பேர் வரைக்கும் இலவசமாகச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கவிருக்கிறது.
யூனோஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தீ மூண்டது.