சிங்க‌ப்பூர்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அன்பளிப்புகள் என்று வரும்போது அரசாங்க ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
பாசிர் ரிஸ் கடற்கரை, செம்பவாங் பூங்கா கடற்கரைக்கு செல்பவர்கள் அங்கு நீந்த வேண்டாம் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்டு அடிப்படையில் சில்லறை விற்பனை 0.4 விழுக்காடு குறைந்தது.
லாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துத் தராமல் மீண்டும் மருத்துவமனை வளர்ச்சியில் முதலீடு செய்தல் அல்லது அறச்செயல்களுக்குப் பயன்படுத்துதல் எனும் புதிய முறையின்கீழ், நோயாளிகளுக்கான மருத்துவமனைக் கட்டணம் தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் ஐந்து இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களும் பைனியர் பகுதிக் குழுவும் இணைந்து நடத்திய ‘மேற்கு உதயம்’ இந்திய கலை கலாசார விழா, கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தில் நடைபெற்றது.