சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் கடப்பிதழ் ஆகச் செல்வாக்குமிக்க கடப்பிதழ் என்ற நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் புதிய ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டணம் போட்டித் திறன்மிக்கதாக இருக்கும். அந்தத் திட்டம் நிறைவடையும்போது கட்டணம் பற்றி முடிவு செய்யப்படும்.
புத்தாண்டு தினத்தன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரலில் 18 வயது இளையர் ஒருவரை பெயர் குறிப்பிடப்படாத கருவி கொண்டு தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆதாம் ஹம்பலி செட்டொனுக்கு $20,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டது.
சட்டவிரோதமாக இயங்கி வந்த கும்பல்களிடம் தங்களின் வங்கிக் கணக்குகளை விற்றதாக அல்லது வாடகைக்கு விட்டதாக எழுவர் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
கஞ்சா போதையில் இருந்த 29 வயது நபில் எர்ஃபான் கமில், தனக்கு அறிமுகமான ஒருவர் தன்னைத் தாக்க வருவதாக எண்ணிக் கத்தியால் அவரைத் தாக்கினார்.