சிங்க‌ப்பூர்

‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு தகவல் உருவாக்கத்துக்கான மாதிரி ஆளுமை கட்டமைப்பை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. அதற்கு உலக நாடுகளின் கருத்தை அறியவும் அது முற்படுகிறது.
இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மெய்நிகர்த் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் முதல் முயற்சியாக தமிழ் முரசு புதிய மெய்நிகர் காணொளியைத் தயாரித்துள்ளது.
உழவுத் தொழிலில் உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் விழா, சிங்கப்பூரில் ஜனவரி 16ஆம் தேதி கிளைவ் ஸ்திரீட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
மூத்தோர் சுகாதாரம், வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்த சிங்ஹெல்த் அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகம் இடையிலான பங்காளித்துவம் ஜனவரி 16ஆம் தேதியன்று புதுப்பிக்கப்பட்டது.
உலகிலேயே ஆக அதிகமான கப்பல்கள் பயன்படுத்தும் கடல்பாதைகளான பனாமா கால்வாய், செங்கடல் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தளவாடத் தாமதங்கள், விலையுயர்வு, விநியோகச் சங்கிலி சீர்குலைவு ஆகியவை ஏற்பட்டன. இதனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சிங்கப்பூரின் தளவாட வளர்ச்சி சற்று மந்தமானது.