சிங்க‌ப்பூர்

பெரிய நாடுகள் அனைத்துலக சட்டத்தை மீறும்போது சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் திங்கட்கிழமை (ஜனவரி 15) அன்று தெரிவித்தார்.
பொங்கலுக்கு பானையும் கரும்பும் இஞ்சி, மஞ்சள் கொத்தும் வாங்க ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 14) லிட்டில் இந்தியாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
செம்பவாங் வட்டாரத்தில் உள்ள சன் பிளாசா கடைத்தொகுதியின் தரைத்தளத்தில் 67 வயது ஆடவர் ஒருவர் கத்திக்குத்துக் காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி $6,600 பெறுமானமுள்ள கொவிட்-19 மானியங்களைப் பெற்றுக்கொண்ட பெண்ணுக்கு 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, சிங்கப்பூர் போஸ்ட் தலைமை நிலையத்தை வந்தடைந்த அஞ்சல் பொட்டலத்தில் சட்டவிரோதப் பொருள்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.