சிங்க‌ப்பூர்

சரியான வெப்பநிலையில் வைக்கப்படாததாகக் கூறப்படும் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைச் சோதனையிட மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் தனியார் வங்கியான கோர்ட்லைஃப் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது.
ஒரே பரிவர்த்தனையில் $80 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருள்கள் வாங்குவோருக்கு $8 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அண்மையில் அறிவித்திருந்தது.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பதற்கு உதவும் புதிய முயற்சியான ‘மாபெரும் மலிவுக் கட்டண உணவு வேட்டை’ அதிகாரத்துவமாக செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
‘ஜெனரேட்டிவ் ஏஐ’ எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவு தகவல் உருவாக்கத்துக்கான மாதிரி ஆளுமை கட்டமைப்பை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. அதற்கு உலக நாடுகளின் கருத்தை அறியவும் அது முற்படுகிறது.
இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மெய்நிகர்த் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் முதல் முயற்சியாக தமிழ் முரசு புதிய மெய்நிகர் காணொளியைத் தயாரித்துள்ளது.