சிங்க‌ப்பூர்

செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தில், 2021ஆம் ஆண்டில் நிகழ்ந்த துவாஸ் எரியாலை வெடிப்புச் சம்பவம் பற்றியும் அதன் தொடர்பில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் தெரிவிக்கப்படும்.
பயணிகள் இனி வடக்கு-கிழக்கு ரயில் பாதையில் செயல்படும் குறிப்பிட்ட ஏழு ரயில் நிலையங்களிலும் பிரத்தியேகமான ரயில் ஒன்றிலும் உள்ளூர் கலைஞர்களால் வரையப்பட்ட கண்ணைப் பறிக்கும் கலை அம்சங்களையும் ஓவியங்களையும் ரசித்தவாறு ரயிலில் பயணம் மேற்கொள்ளலாம்.
ஜனவரி 8ஆம் தேதி காலை, கிளமெண்டி வட்டாரத்தில் சாலை விபத்து நிகழ்ந்தது.
புதிய மேம்பாடுகள் காரணமாக பொங்கோலின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதால் சிலேத்தார் லிங்க் மேம்பாலச் சாலை வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) திங்கட்கிழமை தெரிவித்தது.
வேலையிடப் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளருக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்புக்கொண்டதாக மனிதவள அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது.