சிங்க‌ப்பூர்

மேம்பாலங்களைப் பாதுகாப்பான, செயல்திறன்மிக்க முறையில் சோதனையிடுவதற்கு சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தை (எஸ்யுடிடி) சேர்ந்த பொறியியல் பேராசிரியர் ஒருவரும் பட்டப்படிப்பை முடித்த இரண்டு மாணவர்களும் சிறப்பு ஆளில்லா வானூர்தியை உருவாக்கியுள்ளனர்.
சட்டவிரோதமாக திருடப்பட்ட 1,064 மெட்ரிக் டன் எரிபொருளை ‘பிரைம் சினர்ஜி’ எனப்படும் எண்ணெய்க் கப்பலில் நிரப்பி, பின்னர் அதனை வேறு கப்பலுக்கு மாற்றிய குற்றத்திற்காக பான் சுவான் பின் என்ற ஆடவருக்கு வெள்ளிக்கிழமை ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் பிரசவத்தின்போது வெளியாகும் நஞ்சுக்கொடி மற்றும் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் சேவையை வழங்கும் ‘கார்டுலைஃப் குரூப் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளின் விலை டிசம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை 40 விழுக்காட்டுக்கும் மேல் சரிந்தன.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய பணமோசடி விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபர் மீது ஓசிபிசி வங்கி வழக்குத் தொடுத்துள்ளது.
உலக நாடுகளுக்கான மின்னிலக்கப் போட்டித்தன்மைத் தரவரிசையில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.