சிங்க‌ப்பூர்

வெவ்வேறு தருணங்களில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள வயது குறைந்த பெண்கள் இருவரைக் கர்ப்பமாக்கிய இளையர், சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளுமாறு புதன்கிழமையன்று (ஏப்ரல் 17) உத்தரவிடப்பட்டது.
செஸ்ட்னட் அவென்யூவில் பெரிய மரம் ஒன்று விழுந்து காரை நசுக்கியது.
நொடித்துப்போன ஸ்வைபர் எனும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான ரேமண்ட் கோவுக்கு 100,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் “இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்” என்ற கருப்பொருளில், கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பில் தமிழ்மொழி விழா சிறப்பாக நடந்து வருகிறது. 

ஏழாவது ஆண்டாக வருகிற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற உள்ள நிகழ்வில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் இந்திய சமூகத் தலைவர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுக் கருத்தரங்கை இவ்வாண்டு சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி அன்று நடத்துகிறது.