சிங்க‌ப்பூர்

தெம்பனிஸ் சாலை விபத்தில் உயிரிழந்த 17 வயது அஃபிஃபா முனிரா முகம்மது அஸ்‌ரில், துடிப்பான இளம் பெண், ஆக்கபூர்வமான உணர்வுகளை அதிக அளவில் வெளிப்படுத்தியவர் என்று தெமாசெக் தொடக்கக் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் நினைவுகூர்ந்தனர்.
தீவு விரைவுச்சாலையில் பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மது அருந்திவிட்டுக் காதலியுடன் சண்டையிட்டு அவரை அடித்துக் கொன்ற எம்.கிருஷ்ணன் எனும் 40 வயது ஆடவருக்கு, ஏப்ரல் 22ஆம் தேதி, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது வெளிநாட்டு ஊழியரான வரதராஜூ சுந்தராஜன் கீழே விழுந்து மாண்டார்.
தமது கட்சிக்காரரிடமிருந்து பணம் கையாடியதை முன்னாள் வழக்கறிஞரான 58 வயது சொராயா ஹஃப்சா இப்ராகிம் ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டார்.