இந்தியா

விஜயவாடா: ஆந்திராவில் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடல்நிலை காரணங்களுக்காக நான்கு வார காலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுடெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியாவில் 461,312 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 168,491 பேர் உயிரிழந்தனர்; 443,366 பேர் காயமடைந்தனர்.
மும்பை: உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி வேகமாகப் பறந்தது ஒரு மருத்துவ அவசர வாகனம்.
புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைப் பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். மணீஷ் சிசோடியா மீதான வழக்கை ஆறு மாதத்திலிருந்து எட்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.