இந்தியா

இம்பால்: மணிப்பூரின் இம்பால் நகரத்தின் மேற்குப் பகுதியில் திடீரென வன்செயல் வெடித்ததாகவும் இரண்டு வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமையும் மழை நீடித்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தமது தாயார் சோனியாகாந்திக்கு நாய்க் குட்டி ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். அவர் நாய்க்குட்டி வழங்கும் காணொளியை அனைத்துலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. நூரி என்று பெயர் கொண்ட அந்த நாய்க்குட்டியை தமது தாயார் சோனியா காந்திக்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவுக்குச் சென்றிருந்தபோது நூரியை ராகுல் வாங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.