இந்தியா

ஆந்திரப் பிரதேசம், அன்னமய்யா மாவட்டத்தில் தக்காளி விற்பனையில் கிடைத்த பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக அடையாளம் தெரியாதவர்களால் தக்காளி விவசாயி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஷாஹ்டால் மாவட்டத்தில் சிற்றுண்டி கடை நடத்தி வரும் சஞ்சீவ் பர்மன், சமையலுக்கு தனது மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை பயன்படுத்தியுள்ளார். தக்காளி விற்கும் விலைவாசிக்கு என்னிடம் கேட்காமல் எப்படி இரண்டு தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவீர்கள் என்று கோபடைந்துள்ளார். வாக்குவாதம் முற்ற, அவர் தனது மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். எங்கு தேடியும் மனைவி, மகள் கிடைக்காததால் உள்ளூர் காவல் நிலையத்தில் சஞ்சீவ் புகார் அளித்தார். காணாமல் போன மனைவி, மகளை கண்டுபிடித்து ஒப்படைப்பதாக சஞ்சீவிடம் காவல் துறை உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
பாட்னா: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள இக்பால்பூர் பகுதியைச் சேர்ந்த இளையருக்கும் பஜவுரா கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எதிர்பாராத திருப்பம்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள நியூமன் கல்லூரி பேராசிரியர் டி.ஜே.ஜோசப்பின் வலது கையை கடந்த 2010 ஜூலை 4ஆம் தேதியன்று பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த சிலர் வெட்டினர்.
இம்பால்: மணிப்பூரில் கலவரத்தின்போது காவல்துறை கமாண்டோக்களின் சீருடைகள், ஆயுதங்கள் திருடுபோயின. இந்நிலையில் கலவரக்காரர்கள் சிலர் திருடப்பட்ட கமாண்டோக்களின் சீருடையை அணிந்து வன்முறையில் ஈடுபடுவது வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது.