திரைச்செய்தி

சென்னை கொரட்டூரில் தனது அம்மா ஷோபாவுக்காக நடிகர் விஜய் சாய்பாபா கோயிலைக் கட்டியுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவி ரூ.10 கோடி ஊதியம் கேட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் தமிழ்நாட்டின் சாலைகளில் நடைபெறும் ‘ஹேப்பி ஸ்திரீட்’ கலைநிகழ்ச்சிகள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். நாகரிகமாக ஆடை அணிய பெண்களுக்குத் தெரியும், அவர்களுக்கு கற்பிக்கத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நடிகை பிரியாமணி ‘மைதான்’ பட விழாவில் கலந்துகொண்டபோது, அவரை மறைந்த ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தகாதமுறையில் தொட்டு அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக வலைத்தளவாசிகள் குறை கூறி வருகின்றனர்.
வரலட்சுமி நடித்துள்ள ‘சபரி’ என்ற புதிய படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. நாயகியை முன்னிலைப்படுத்தும் இந்தப் படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், மதுநந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். கோபிசுந்தர் இசையமைத்துள்ளார்.