திரைச்செய்தி

விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரே வில்லனாக நடிக்க இருக்கும் படத்தை பிரபல இயக்குநர் கோகுல் இயக்குகிறார்.
நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் தனது திருமண வதந்திகள் குறித்து பேசியுள்ள அவர், “சினிமாவில் எனக்கு அதிகமான நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில், நடிகர் ஜெய்யை காதலித்ததாகச் செய்தி வந்தது. பிறகு தொழிலதிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் தங்கி விட்டதாகச் சொன்னார்கள். எனக்கே தெரியாமல் எனக்குத் திருமணம் ஆனதை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நடிகை என்பதால் அவர்கள் விருப்பத்திற்கு இப்படி எழுதுகிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
பொங்கலுக்கு சிறப்பு படங்களாக தமிழ், தெலுங்கில் வெளியாக இருந்த ‘கேப்டன் மில்லர்’, ‘அயலான்’ படங்கள் தெலுங்கில் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
பொங்கல் தினத்தை முன்னிட்டு இம்மாதம் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பிரபல நாயகன்கள் நடித்துள்ள புதுப்படங்கள் வெளிவர வரிசை பிடித்து நிற்கின்றன.
ஜனவரி 7, 8ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாம் நாளில் வருகையளித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார் தமிழ்த் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன்.