கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சதிவேலைகள் நடப்பதாகக் கூறப்பட்ட போதிலும் அத்தீர்மானத்திற்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனவே டாக்டர் மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று நிபுணர்களும் அரசியல் ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றப்படுவதற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவு இருந்தால் போதும். ஆனால் ஒரு பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு மொத்தம் 222 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் குறைந்தது 112 எம்பிக்கள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண் டும்.
அத்துடன் அத்தகைய நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்புவோர் பல உடன்பாடுகளை முறித்துக் கொள்ள வேண்டியிருக்கும். மேலும் போதுமான எம்பிக்களின் ஆதரவைப் பெற அவர் பல வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டும். இதனால் டாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான சாத்தியமில்லை என்று நிபுணரான ஷாம்ரஹாயா அஸிஸ் கூறினார்.
மகாதீர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் சாத்தியமில்லை
21 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 09:12
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!