கோலாலம்பூர்: ஏற்கெனவே பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீது மேலும் ஒரு நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது நேற்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில்
குற்றம் சாட்டப்பட்டது. யாயாசான் அகால்புடி அறக்கட்டளை அமைப்பின் அறங்காவலராக ஸாஹிட் இருந்தபோது அறக்கட்டளை நிதியில் 260,000 ரிங்கிட் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அவர் அக்குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவருக்கு இரண்டிலிருந்து 20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மலேசிய முன்னாள் துணைப் பிரதமரான ஸாஹிட் மீது ஏற்கெனவே 47 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அம்னோ தலைவர் ஸாஹிட் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு
21 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 09:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!