நீதிமன்ற முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய ஆணையம் ஒன்று நிறுவப்படும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருக்கிறார்.
'ஆர்சிஐ' என்ற அந்த ஆணையத்தை நாங்கள் அமைக்கிறோம். குற்றச்சாட்டுகளை விசாரிப்பது அதன் கையில் உள்ளது," என்று அவர் கூறினார்.
பல்வேறு நீதிமன்ற விசாரணைகளில் மூத்த நீதிபதிகள் குறுக்கிடுவதாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஹமித் சுல்தான் அபு பக்கார் குற்றம் சாட்டியதை அடுத்து இந்த ஆணையம் அமைக்கப்படுகிறது.