வட்ட ரயில் பாதையில் அமைந்த ஒன்-நார்த் நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகள் நேற்று முன்தினம் கடுமையாக விரிசல் அடைந்த கண்ணாடித் தடுப்பைக் கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த பழுந்தடைந்த தடுப்பு ரயில் நிலைய நடைமேடையில் இருந்தது. கண்ணாடியில் அமைந்த குறைபாடுகள் காரணமாக விரிசல் விழுந்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.
பாதுகாப்புக்காக அந்த இடத்தைச் சுற்றி தடுப்புகள் வைக்கப்பட்டன. சேவை நேரம் முடிந்த பிறகு கண்ணாடியை மாற்றியதாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் நாதன் நேற்று தெரிவித்தார். விரிசல் அடைந்த கண்ணாடிப் தடுப்பின் படம் இணையத் தளத்தில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இணையவாசிகள் பலரும் பாதுகாப்புப் பற்றி தங்கள் அக்கறையை வெளிப்படுத்தினர்.
கடுமையாக விரிசலடைந்த ஒன் நார்த் வட்ட ரயில் பாதையின் ரயில் தட கண்ணாடித் தடுப்பு. படம்: ஃபேஸ்புக்