புதுடெல்லி: பாகிஸ்தானின் 'ஐஎஸ்ஐ' உளவு அமைப்பு, ஏராளமான அளவுக்கு ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகளைக் குவித்து வைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு 500 கோடி ரூபாயாக இருக்கும் என்று நம்பப் படுகிறது. இந்நிலையில் ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்று இந்திய அரசு அறிவித்து விட்டதால் பழைய நோட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அமைப்பின் அதிகாரிகள் திண்டாடுவதாகவும் கூறப்படு கிறது.
ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்புக்கு ஒரு பக்கம் ஆதரவு குவிந்தாலும் மறுபக்கம் எதிர்ப்புகளும் வலுத்து வருகின்றன. இருப்பினும் இந்த முயற்சியை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சில பத்திரிகைகள் மோடி யின் பொருளியல் சீர்திருத்தத்தைப் புகழ்ந்து கட்டுரைகளை வெளி யிட்டுள்ளன. இதற்கிடையே மோடியின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் சில கட்சி களைப் போல பாகிஸ்தானும் பழைய நோட்டுகளை வைத்துக் கொண்டு தவிக்கிறது.