பார்வை இல்லாத அனுபவம் பெற...

பார்வை இல்லாதவர்கள் அன்றாட வாழ்வில் எத்தகைய சிரமங்களை எல்லாம் எதிர்நோக்குகிறார்கள் என்பதைச் சிறந்தமுறையில் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற் காக நேற்று 60க்கும் அதிகமான மக்கள் தங்கள் கண் களைக் கட்டிக்கொண்டு பொங்கோல் முழுவதும் பல இடங் களுக்கும் சென்று வந்தார்கள். அரசாங்க அமைப்புகள், பொங்கோல் அடித்தள அமைப்பு கள், எஸ்எம்ஆர்டி உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆகியவற் றைச் சேர்ந்த மொத்தம் 66 பேர் நான்கு நான்கு பேராக ரயில்களிலும் பேருந்துகளிலும் பயணம் செய்தார்கள்.

ஒவ்வொரு நால்வரிலும் இருவர் கண்களைக் கட்டிக் கொண்டனர். மற்ற இருவரில் ஒருவர் பார்வை குறை பாடுள்ள தூதுவர். மற்றொருவர் வழிகாட்டி. கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங், தன் கண் களைக் கட்டிக்கொண்டு பொங்கோல் ஈஸ்ட்டிலிருந்து பொங்கோல் எல்ஆர்டி வரை பேருந்தில் சென்றார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் பின்னர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவர்கள் தெரிவிப்பவை எதிர்கால நகரத் திட்டங்களிலும் கொள்கைகளிலும் இடம்பெறக்கூடும்.

கண்களைக் கட்டிக்கொண்டு வழிகாட்டி உதவியுடன் அமைச்சர் இங் சீ மெங் (வலது) பொங்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!