சென்னை: தமிழகத்தில் அரவக் குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங் குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதியிலும் நேற்று வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 5 மணியோடு பிரசாரம் முடிவடைந்த நிலையில் நேற்றுக் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங் கியது. அனைத்துத் தொகுதிகளிலும் மக்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு நிலவரங்களை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் ஆணையம் இணையத் தளத்தில் வெளியிட்டது.
அதன்படி காலை 8 மணி நில வரப்படி அரவக்குறிச்சி தொகு தியில் 9 விழுக்காடு வாக்குகளும் புதுச்சேரியில் உள்ள நெல்லித் தோப்பு தொகுதியில் 11 விழுக் காடும் வாக்குகள் பதிவாகி யிருந்தன. தஞ்சாவூரில் 61 விழுக்காடும் திருப்பரங்குன்றத் தில் 63 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன்படி மூன்று தொகுதிகளிலும் சராசரியாக 65.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுவை நெல்லித்தோப்பில் 75.4% வாக்குகள் பதிவாகி யுள்ளன. வாக்கு எண்ணிக்கை வரு கிற 22ஆம் தேதி காலை எட்டு மணிக்குத் தொடங்குகிறது. பகல் 12 மணி அளவில் முடிவுகள் வெளியாகிவிடும் என எதிர்பார்க் கப்படுகிறது.