சென்னை: மத்திய அரசைக் கண்டித்து நாளை வங்கிகள் முன்பு காங்கிரஸ் கட்சி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு நாவுக்கரசர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், துக்ளக் பாணியில் தினந்தோறும் மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் மக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"எந்தவித அவசர சட்டமோ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்டங்களோ இல்லாமல் கடந்த நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் 500, 1,000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்து நாட்டு மக்கள் மீது துல்லிய தாக்குதலை நரேந்திர மோடி நிகழ்த்தியிருக் கிறார். நாள்தோறும் பல்வேறு விதமான அறிவிப்புகள். முதலில் 4,000 ரூபாய், பிறகு 4,500 ரூபாய், இப்போது திடீரென 2,000 ரூபாய் வரை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம் என்று துக்ளக் பாணியில் தினம் தினம் அறிவிப்புகள் வெளிவருகின்றன.
"நாட்டு மக்கள் 500 ரூபாய்க்கு வங்கிகளின் வாசலில் காத் திருக்கும் அவல நிலையில் கர் நாடகா முன்னாள் பாஜக அமைச் சர் ஜனார்த்தன ரெட்டி ரூ.650 கோடி செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தியிருக்கிறார். இவ்வளவு பெரிய தொகையை எந்த வங்கியில் எப்படி பெற்றார், எந்த வங்கியில் வரிசையில் நின்று பணத்தை மாற்றினார் என்று ஏழை, எளிய மக்கள் அறிய விரும்புகின்றனர் என்றார்.