தமிழக மீனவர்கள் புகார்: இலங்கை கடற்படை மீது வழக்குப் பதிவு

வேதாரண்யம்: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய புகாரின் பேரில் இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி தமிழக மீனவர்கள் 9 பேர் கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!