சென்னை: இந்தியாவின் தேவை யைப் பூர்த்தி செய்யும் வகையில் விமான நிலையங்களின் எண் ணிக்கை இரண்டு மடங்காக அதி கரிக்கப்படவிருக்கிறது. சென்னை விமான நிலையத்தை உலகளாவிய விமான நிலையமாக மேம்படுத்தவும் சிறு நகரங்களை இணைக்கும் வகையில் வட்டார அளவில் விமான நிலையங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்ட மிட்டு வருகிறது. தென் இந்திய வர்த்தக, தொழிற்சபை கூட்டத்தில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை யின் மத்திய துணை அமைச்சர் ஜயந்த் சின்ஹா இந்த விவரங் களை வெளியிட்டார்.
இந்திய விமான நிலையங் களின் ஆற்றலைப் பெருக்கும் வகையில் உள்கட்டமைப்பு வசதி கள் மேம்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். "பெரும்பாலான விமான நிலை யங்களின் ஆற்றல் குறைவாக இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், "உள்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது," என்றார்.