மணிலா: சுசுகிக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் சிங்கப்பூர் இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களில் ஒரு புள்ளி விவரம் கவலையளிக்கிறது. இதுவரை ஒரு கோலைக்கூட அதனால் போடமுடியவில்லை என்பதே அது. மொத்தம் உள்ள எட்டு குழுக் களிலும் சிங்கப்பூர் மட்டுமே இது வரை எந்தக் கோலையும் புகுத்த வில்லை.
கடந்த சனிக்கிழமை பிலிப்பீன்சுடன் கோல் போடாமல் சமநிலை கண்ட சிங்கப்பூர், நேற்றுமுன்தினம் தாய்லாந்திடம் ஒன்றுக்குப் பூஜ்யம் என தோல்வி கண்டது. இனி எஞ்சியிருக்கும் ஓர் ஆட்டத்தில் இந்தோனேசியா வுக்கு எதிராகக் கோல் அடித்தே ஆக வேண்டிய நிலைக்கு சிங்கப் பூர் தள்ளப்பட்டுள்ளது. அந்த ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. "கோல் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை," என்று தாக்குதல் ஆட்டக்காரர் கைருல் அம்ரி கூறினார்.