ஜெயலலிதா: மக்கள் என் பக்கம் உள்ளனர்

சென்னை: மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்தவர் களுக்கு முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெய லலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், மருத்துவமனை யில் உடல் நலம் தேறி வரும் நிலையில் தேர்தல் வெற்றி தமக்கு உற்சாகத்தை அளித் துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மூன்று தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து பல்வேறு கட்சித் தலை வர்களும் கருத்து தெரிவித்துள் ளனர். "மருத்துவமனையில் உடல் நலம் தேறி வரும் எனக்கு நீங் கள் வழங்கியிருக்கும் இந்தத் தேர்தல் வெற்றி எல்லையில்லா மகிழ்ச்சியையும், உற்சாகத்தை யும் அளித்துள்ளது. இந்த வெற்றி மூலம் மக்கள் என் பக் கம் என்பது மீண்டும் நிரூபிக் கப்பட்டுள்ளது. "உங்களுடைய எதிர்பார்ப்பு களுக்கு ஏற்ப என்னுடைய பணிகள் எப்பொழுதும்போல் சிறப்புடன் தொடரும். நான் விரைவில் பூரண நலம்பெற வேண்டி அதிமுகவினரும், தமிழக மக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறீர்கள் என்பதையும் பலர் மருத்துவமனைக்கே நேரில் வந்து நலம் விசாரித்து செல் கிறீர்கள் என்பதையும் நன்கு அறிவேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!