வாகனங்களை மீட்க சிங்கப்பூர் ஆயுதப் படை நடவடிக்கை

சிங்கப்­பூர் தற்­காப்பு அமைச்­சின் ஒன்பது கவச வாக­னங்களை ஹாங்காங்­கி­லி­ருந்து கொண்டு வரும் பொறுப்பைப் பெற்ற 'ஏபிஅல்' கப்பல் நிறு­வ­னம் தற்போது ஹாங்காங் அதி­கா­ரி­களு­டன் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக தற்­காப்பு அமைச்சு நேற்று தகவல் வெளி­யிட்­டது. மேலும் இந்தப் பிரச்­சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு அமைச்­சின் அதி­கா­ரி­கள் அடங்­கிய குழு ஒன்று ஹாங்காங் சென்­றி­ருப்­ப­தாக அமைச்­சின் அறிக்கை கூறிப்­பிட்­டது.

வெளி­நாட்டுப் பயிற்­சிக்­காக பயன்­படுத்­தப்­பட்ட இந்த 9 'டெரெக்ஸ்' கவச வாக­னங்கள் ஹாங்காங்­கின் சுங்கத்­துறை­யால் நேற்று முன்­தி­னம் 'கவாய் சுங்' கொள்­க­லக் கப்பல் முனையத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டன. 'ஏபிஅல்' கப்பல் நிறு­வ­னம் அனைத்து கட்­டுப்­பாடு­களுக்­கும் இணங்க வேண்டும் என்றும் எடுத்­துச் செல்லும் அனைத்­து உப­க­ர­ணங்கள் பற்றிய தக­வல்­களை­யும் தெரி­விக்க வேண்டும் என்றும் தேவையான அனைத்து அனு­ம­திச் சீட்­டு­களை­யும் தயார்நிலையில் வைத்­தி­ருக்க வேண்டும் என்றும் அமைச்சு விளக்­கி­யது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!