கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார்

ஹவானா: கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும் அந்நாட்டு முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது 90வது வயதில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனை அவரது சகோதரரும் கியூபா அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார். கியூபாவில் 1959ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி மூலம் ஃபிடல் காஸ்ட்ரோ அதிகாரத்தைக் கைப் பற்றினார். 1959 முதல் 2008ஆம் ஆண்டு வரை 49 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தவர் கம்யூனிஸ்ட் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக கியூபாவை ஒரு கட்சி அரசாங்கமாக அவர் ஆட்சி செய்தார். கடந்த 2006ஆம் ஆண்டு அவருக்குத் திடீரென இரைப்பையில் கோளாறு ஏற்பட்ட தைத் தொடர்ந்து அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் 2008ஆம் ஆண்டு அதிபர் பதவியை தன் சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!